சென்ட்ரலில் பராமரிப்பு பணி: 9 ரெயில்கள் நாளை பெரம்பூரில் இருந்து புறப்படும்; சென்ட்ரல்-அரக்கோணம் ரெயில் ரத்து

சென்னை, டிச. 9-

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் சீரமைக்கும் பணி மற்றும் பேசின் பாலம் சிக்னல் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில்கள் மாற்றி விடப்படுகிறது. 4 கட்டமாக நடைபெறும் இந்த பராமரிப்பு பணிகள் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. நாளை (10-ந் தேதி) 3-வது கட்டமாக பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் பயணிகள் ரெயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.

பித்ரகுண்டா- சென்ட்ரல் ரெயில் கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படுகிறது.

சென்ட்ரலுக்கு வரக்கூடிய 9 ரெயில்கள் பெரம்பூருக்கு திருப்பி விடப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

டாடாநகர்- ஆலப்புழை, கவுகாத்தி- பெங்களூர், யஸ்வந்த்பூர்- முசாபர்பூர், ஜெய்ப்பூர்- கோவை, தர்பங்கா- பெங்களூர், பெங்களூர்- கவுகாத்தி, பெங்களூர்- பாட்னா, ஆலப்புழை- டாடாபாத், சாலிமர்- திருவனந்தபுரம் ஆகிய 9 ரெயில்கள் பெரம்பூரில் இருந்து புறப்பட்டுச்செல்லும்.

திருவனந்தபுரம்- சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (எண்: 2696) எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வரும்.

சென்ட்ரல்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (2695) மாலை 3.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டுச்செல்லும்.

All Rights Reserved Blogger tips | Blogger Template by Bloggermint