இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுத்த தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான் தீவிரவாதிகளை சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ராணுவம் விரட்டியடித்தது. இதனால் பாகிஸ்தானின் வடக்கு எல்லை மலைக் காடுகளில் தலிபான் தீவிரவாதிகள் தஞ்சம் அடைந் துள்ளனர்.அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமாக தலிபான்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்கு தல்கள் நடத்தி வருகிறது. இது தலிபான்களுக்கு பெரும் உயிரிழப்பையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதில் இருந்து தப்பிக்க, பாகிஸ்தானின் கவனத்தை திசை திருப்பதலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இந்தியாவில் அடுத்தடுத்து மிகப்பெரிய நாச வேலைகளில் ஈடுபட தலிபான்கள் திட்டமிட்டுள்ளனர்.
நாச வேலை அதிகமானால் பாகிஸ்தான் மீது இந்தியா கோபப்படும் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூளும் ஒரு சூழ்நிலையை உருவாகும். இதையடுத்து வடக்கில் உள்ள ராணுவத்தை வாபஸ் பெற்று இந்திய எல்லை நெடுக பாகிஸ்தான் நிறுத்தும்.
இதன் மூலம் தங்கள் மீதான தாக்குதல்கள் தானாக குறைந்து விடும் என்று தலிபான்கள் நினைக்கிறார்கள். எனவே இந்திய பாதுகாப்புப்படையினர் உஷாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.